Thursday, 28 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்.


சுப்ரமண்ய புஜங்கம்
        ஸ்லோகம் 33 வாழ்த்து.

      " புஜங் காக்ய வ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய:
          படேத் பக்தி யுக்தோ குஹம் ஸம்ப்ரணம் ய
      ஸ புத்ரான் களத்ரம் தனம் தீர்க்கமாயூர்
         லபேத் ஸ்கந்த ஸாயுஜ்ய மந்தே நரஸ் ஸ: "

    புஜங்கப்ரயாதம் எனப்படும் விருத்தத்தில் ஆக்கப்பட்ட, இந்த துதியை
எவன் பக்தியுடன் பாராயணம் செய்கின்றானோ அவன் புத்திரர்களையும்
பத்தினியையும், தனத்தையும், நீண்ட ஆயுளையும் அடைவான். அவன்
முடிவில் ஸ்கந்த ஸாயுஜ்யத்தையும் அடைந்து விடுகிறான்.

முருகனிடம் பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு, சுப்ரமண்ய புஜங்கம்
கிடைத்தற்கரிய மாபெறும் பொக்கிஷமாகும்.முதலில் நன்றாக
படித்து புரிந்து கொண்டு பாராயணம் செய்ய தொடங்கவேண்டும்.
நற்குணங்கள் உடைய புத்திரர்கள, சிந்தைக்குகந்த அன்பு காட்டும்
மனைவி, வற்றாத செல்வம், நீண்ட ஆயுள் என்றவாறு எல்லா
நன்மைகளும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.
அனைத்திற்கும் மேலாக, முடிவில் ஸ்கந்த ஸாயுஜ்யமும்
கிடைத்து விடுகிறது.

                 " உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
               மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
               கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
               குருவாய் வருவாய் அருள்வாய் குகனே "
                                                                  ( கந்தர் அனுபூதி )

இத்துடன் சுப்ரமண்ய புஜங்கத்தின் முப்பத்தி மூன்று ஸ்லோகங்களது
உட்கருத்த்களின் தமிழாக்கமும், மற்றும் அவைகளின் விளக்கங்களும்
நிறைவு பெறுகிறது.


No comments:

Post a Comment