Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 10 அகத்திருள் அகலும்.

 " ஸுவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமானாம்
    க்வணத் கிங்கிணி மேகலா சோப மானாம்
 லஸத் ஹேம பட்டேன வித்யோத மானாம்
   கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் "

 கந்த பெருமானே, தேவர்கள் உடுக்கின்ற பொன்பொன்ற சிறந்த ஆடைகளால் ஒளிர்கின்றதும், ஒலியெழுப்பும் சலங்கைகள்
கோர்க்கபட்ட ஒட்டியாணத்தால் அலங்கரிக்கபட்டதும், பொன்னாலான
பட்டத்தினால் பிரகாசிக்கின்றதுமான, உமது இடையை தியானிக்கிறேன்.

இதற்கு முந்தய ஸ்லோகத்தில் முருகனின் தாமரை பாதங்களை
துதித்த சங்கரர், இனி வரும் ஸ்லோகங்களில் அடி தொட்டு முடி வரை,
என்ற ரீதியில் வர்ணித்து, ஆராதிக்கின்றார். அழகு என்ற சொல்
வடிவெடுக்கும் பொழுது முருகனாகிறது. அவனுடைய எந்தவொரு
அங்கமும், மற்ற எந்தவொன்றையும்விட , எந்தவிதத்திலும் குறைந்து
விடவில்லை என்றவாறு முழு வடிவும் அழகு என்ற சொல்லுக்கு
தனி இலக்கணமே வகுத்துவிடுகிறது. செந்திலாண்டவனின்
இடுப்பு, பொன்னாலான ஆடைகளால் அலங்கரிக்கபட்டிருக்கிறது.
மேலும் தங்கத்தினாலான பட்டம்,மற்றும் அதை சுற்றியவாறு
தங்க ஒட்டியாணம் என்று மின்னியவாறு விளங்குகிறது.பொன்
பட்டாடைகளாலும், பொன்ணாபரனங்களாலும் அலங்கரிக்க பட்டிருக்கும்,
இடுப்பு பாகத்தை தியானிக்கிறேன் என்று சங்கரர் கூறி துதிக்கிறார்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபித்து வந்தால் அறியாமை நீங்குவதுடன்
அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும்.

No comments:

Post a Comment