Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

  ஸ்லோகம் 11 ஆபத்துகள் அணுகாது.

  " புலிந்தேச கன்யா கனாபோக துங்க
     ஸ்தனாலிங்க னாசக்த காஸ்மீர ராகம்
  நமஸ்யாம் யஹம் தாரகாரே தவோர:
     ஸ்வ பக்தாவனே ஸர்வதா ஸானுராகம் ",

 தாரகாசுரனை அழித்த முருகா, வேடன் மகள், வல்லியின் பெருத்து
விரிந்து உயர்ந்திருக்கும், கொங்கைகளின் அணைப்பினால், குங்கும
பூப்போல சிவந்திருக்கின்ற , பக்தர்களை காப்பாற்றுவதில் எப்பொழுதும்
ஆவலுடன் இருக்கின்ற தங்களது மார்பை வணங்குகின்றேன்.

ஆறுமுகன் மேல் கொண்ட ஆறாக்காதலினால், கடும் தவம் செய்து,
அவனையே கணவனாக அடைந்தவள், வேடன் மகள் வல்லி.
அவனுடைய சிவந்த மார்பை தனது மார்பகங்களால், நன்கு அழுத்தியவாறு அரவணைத்துக் கொள்வதால், முருகனின் மார்பு
குங்கும பூப்போல மேலும் சிவந்து விடுகிறது. இந்த ஸ்லோகங்களை
இயற்றிய, சங்கரருக்கோ வேறொரு காரணம் புலப்படுகின்றது.
அதாவது தனது பக்தர்களை அக்கறையுடன காப்பாற்றுவதில்,
எப்பொழுதும் ஆவலுடன் தயார் நிலையில் இருந்து கொண்டிருப்பதால்,
முருகனது மார்பு மேலும் மேலும் சிவந்த வண்ணம் இருக்கின்றது
என்கிறார்.இச்சா சக்தி வல்லியும், கிரியா சக்தி தேவயானையும்
புடைசூழ, ஞானசக்தியாக திகழ்கின்ற முருகன்,தனது பக்தர்களை
மாயையின் பிடியிலிருந்து விடுவித்து பேரின்ப நிலையை
அடைய செய்வதில் மிகவும் ஆசை கொண்டவனாக இருக்கின்றான்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபித்து வந்தால் ஆபத்துகள் அணுகாது.
அடியார்களின் அனைத்து கவலைகளையும், அகற்றி அருளும்,
செந்தில் முருகனது செவ்வழகு மார்பினை இவ்வாறு சங்கரர்
வணங்கி துதிக்கிறார்.

No comments:

Post a Comment