Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்


   ஸ்லோகம் 19 கர்ம வினை தீருவதற்கு.

   " குமாரேச ஸுனோ குஹ ஸ்கந்த ஸேனா -
        பதே சக்தி பாணே மயுராதி ரூட
    புலிந் தாத்ம ஜா காந்த பக்த்தார்த்தி ஹாரின்
      ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் "

  குமாரா,ஈசன் மகனே, குஹனே, கந்தனே, சேனாபதியே, வேல்
தரித்தவனே, மயில் மேலிருப்பவனே, வல்லியின் நாயகனே,
பக்தர்களின் மனக்கவலைகளை நீக்குகின்றவனே, பிரபுவே,
தாரகனை அழித்தவனே, என்னை எப்பொழுதும் நீ ரக்ஷித்து
கொண்டிருக்க வேண்டும்.

அருள்மிகு திருமுருகனின், சக்திவாய்ந்த பெயர்கள சிலவற்றால்
அவனை அழைத்து, வணங்கும் சங்கரர் தன்னை எப்பொழுதும்
அவன் காப்பாற்றி கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறார். என்றும் பதினாறு வயதே கொண்ட பாலகனாக
விளங்குவதால் குமரன் அல்லது குமாரன் எனப்படுகிறான்.
பரமசிவனின் மகன் என்பதால் சிவகுமாரன். பக்தர்களின் இதய
குகையில் இடம் கொள்வதால் குஹன். வேலும் மயிலும்
இல்லாமல் முருகன் இல்லை. ஆதலால் வேலை கையில்
பிடித்தவாறு மயில் மேல் அமர்ந்தவாறு இருக்கிறான்.வேலாயுதன்,
மயில் வாகனன் என்று அழைக்கப்படுகிறான். வல்லியை கவர்ந்த
வல்லி நாயகம். ஆர்த்திஹரன்,அதாவது அடியார்களின் கவலைகளே
அழிக்கின்றவன்.அனைத்து செல்வங்களும் பெற்றிருப்பதால் பிரபு.
தேவர்கள் படைக்கு தளபதியாக இருப்பதால் ஸேனாபதி.
தாரகாசுரனை சம்ஹரித்ததால் தாரகாரி. இந்த ஸ்லோகத்தில்
காணப்படுகின்ற முருகனுடய பெயர்களால் அவனை அர்ச்சித்து
வழிபடவேண்டும். நம்மை வதைக்கும் கர்ம வினைகள் தீர்ந்துவிடும்.

No comments:

Post a Comment