ஸ்லோகம் 17 சத்ருபயம் நீங்கும்
" ஸ்புரத் ரத்ன கேயூர ஹாராபி ராம
ச்சலத் குண்டல ஸ்ரீ லஸத் கண்ட பாக:
கடௌ பீதவாஸா: கரே சாரு சக்தி:
புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ: "
ஒளி வீசும் ரத்ன தோள்வளை, மேலும் நல்முத்து மாலை இவற்றால்
அழகு வாய்ந்தவனாய், அசைந்தாடும் குண்டலங்களின் காந்தியால்
மின்னுகின்ற கன்னங்கள் கொண்டவனாய், இடுப்பில் பீதாம்பரம்
தரித்தவனாய், கையில் அழகிய வேலை பிடித்துக்கொண்டிருப்பவனாய்,
திரிபுரம் எரித்த சிவனின் மைந்தன் எனக்கு முன்னால் தோன்ற
வேண்டும்.
இந்த ஸ்லோகத்தில், சங்கரர் தான் விரும்பும் அலங்காரத்துடன்,
வேல் பிடித்தவனாக, திரிபுரம் எரித்த சிவனின் மகன் முருகன்
காட்சி கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். இரத்தினங்கள்
பதித்த தங்க தோள்வளை தரித்துக் கொண்டும், உயர்ந்தரக
நன்முத்துக்களால் கோர்க்கபட்ட மாலை அணிந்து கொண்டும்,
செவிகளில் விளங்கும் அசைந்தாடி கொண்டிருக்கும், மகர குண்டலங்களின் காந்தியால், மின்னும் கன்னங்கள் கொண்டவனாகவும்,
இடுப்பில் பீதாம்பரம் தரித்தவனாகவும், சிவகுமாரன் காட்சி
தந்தருள வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. அக்கணமே
அருளாளன் ஆறுமுகன், அவருக்கு காட்சி தந்தான்.விரோதிகளால்
ஏற்படும் பயத்தை போக்குவதுடன், அவர்களை அடக்கியாளும்
வல்லமையையும், இந்த ஸ்லோக ஜபம் வழங்குகிறது. முருகனை
வழிபடுகின்ற, பக்தர்களுக்கு இது தியான ஸ்லோகமாக அமைந்திருக்கிறது. இந்த ஸ்லோகத்தை மட்டும், நியமத்துடன்
இடைவிடாது ஜபித்து வருபவர்களுக்கு, செந்தில் வேல் முருகன்,
வர்ணிக்கபட்ட அலங்காரத்துடன் தரிசனம் தந்தருள்வான் என்பது
நிச்சயம்.
" ஸ்புரத் ரத்ன கேயூர ஹாராபி ராம
ச்சலத் குண்டல ஸ்ரீ லஸத் கண்ட பாக:
கடௌ பீதவாஸா: கரே சாரு சக்தி:
புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ: "
ஒளி வீசும் ரத்ன தோள்வளை, மேலும் நல்முத்து மாலை இவற்றால்
அழகு வாய்ந்தவனாய், அசைந்தாடும் குண்டலங்களின் காந்தியால்
மின்னுகின்ற கன்னங்கள் கொண்டவனாய், இடுப்பில் பீதாம்பரம்
தரித்தவனாய், கையில் அழகிய வேலை பிடித்துக்கொண்டிருப்பவனாய்,
திரிபுரம் எரித்த சிவனின் மைந்தன் எனக்கு முன்னால் தோன்ற
வேண்டும்.
இந்த ஸ்லோகத்தில், சங்கரர் தான் விரும்பும் அலங்காரத்துடன்,
வேல் பிடித்தவனாக, திரிபுரம் எரித்த சிவனின் மகன் முருகன்
காட்சி கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். இரத்தினங்கள்
பதித்த தங்க தோள்வளை தரித்துக் கொண்டும், உயர்ந்தரக
நன்முத்துக்களால் கோர்க்கபட்ட மாலை அணிந்து கொண்டும்,
செவிகளில் விளங்கும் அசைந்தாடி கொண்டிருக்கும், மகர குண்டலங்களின் காந்தியால், மின்னும் கன்னங்கள் கொண்டவனாகவும்,
இடுப்பில் பீதாம்பரம் தரித்தவனாகவும், சிவகுமாரன் காட்சி
தந்தருள வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. அக்கணமே
அருளாளன் ஆறுமுகன், அவருக்கு காட்சி தந்தான்.விரோதிகளால்
ஏற்படும் பயத்தை போக்குவதுடன், அவர்களை அடக்கியாளும்
வல்லமையையும், இந்த ஸ்லோக ஜபம் வழங்குகிறது. முருகனை
வழிபடுகின்ற, பக்தர்களுக்கு இது தியான ஸ்லோகமாக அமைந்திருக்கிறது. இந்த ஸ்லோகத்தை மட்டும், நியமத்துடன்
இடைவிடாது ஜபித்து வருபவர்களுக்கு, செந்தில் வேல் முருகன்,
வர்ணிக்கபட்ட அலங்காரத்துடன் தரிசனம் தந்தருள்வான் என்பது
நிச்சயம்.
No comments:
Post a Comment