Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

          ஸ்லோகம் 18 ஆனந்தம் அனுபவிக்க.
 
   " இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
        ஹ்வயத் யாதராத் சங்கரே மாதுரங்காத்
    ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
        ஹராஸ் லிஸ்ட காத்ரம் பஜே பால மூர்த்திம் ",

' குழந்தாய் இங்கு வா ' என்று கைகளை விரித்தவாறு பரமசிவன்
அழைத்ததும், தாயின் மடியினின்றும் துள்ளித் தாவி தந்தையை
அடைந்தவரும், அவரால் அணைக்கப்பட்டவருமான, குழந்தை
முருகனை வணங்குகிறேன்.

அன்னை பார்வதியின் மடியில் குதூகலத்துடன் தவழ்ந்து
விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை முருகனை கண்டதும்,
தந்தை பரமசிவனுக் கு ஆனந்தம் பொங்கித் ததும்புகிறது.
ஆவலுடன் கைகளை நீட்டியவாறு அழைத்ததுமே, முருகனும்
தாவிக்குதித்து தந்தை சிவனை அடைந்து அவரால் அணைத்து
கொள்ள படுகிறான். அன்பே வடிவான சிவனுக்கு ஆனந்தம்
மென்மேலும் அதிகரிக்கிறது. இது போன்ற சமயங்களை தவிர
மற்ற எல்லா நேரங்களிலும், தாயின் மடியில் தான் முருகன்
வீற்றிருப்பான். ' அன்னை மடித்தல பிள்ளை யவன், சச்சிதானந்த
நாட்டுக்கு எல்லை யவன் ' ( அகத்தியர் ), தந்தைக்கும் மகனுக்கும்
இடையிலான பாசபிணைப்பை கண்ணுற்று, சங்கரரும் முருகனை
வணங்கி மகிழ்கிறார்.குழந்தை முருகனை, இதயத்தில் இருத்தி,
மிகுந்த பாசத்துடன், பக்தி செலுத்தும் அடியார்களும் சிவன்
அடைவது போல, ஆனந்தம் அடைவார்கள். ' அள்ளி அணைப்பவர்
சொந்தமவன், புகழ் நான்மறை அந்தமவன் ' ( அகத்தியர் ), இந்த
ஸ்லோகத்தை ஜபிக்கின்றவர்கள் எப்பொழுதும் ஆனந்தமாக
இருப்பார்கள்.துக்கங்களுக்கும், துயரங்களுக்குமான காரணங்கள்
கண்டறியபட்டு, களையப்படுகின்றன.

No comments:

Post a Comment