ஸ்லோகம் 26 சரணடைதலின் நற்பலன்.
" த்ருஸி ஸ்கந்தமூர்த்தி: ஸ்ருதௌ ஸ்கந்த கீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தத் சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமா சேச பாவா : "
எனது கண்களில் கந்தன் உருவங்களும், காதுகளில் அவனது கீர்த்தியும்,
முகம் அவனது சரித்திரத்தை பிரதிபலிக்கும் பாவனைகளாகவும்,
கைகள் அவனை அர்ச்சிக்கவும், உடல் அவனுக்கு பணிவிடை
செய்தலுக்கும் என்றவாறு அனைத்தும் அவனிடம் லயித்து
விடட்டும்.
அழகு முருகனின் விதவிதமான வடிவங்களை கண்டு ரசிப்பதற்காகவே
கண்களையும், வீரதீர செயல்கள் புரிந்து வெற்றி வேலனாய் விளங்கும்
அவனது புகழை விவரிக்கும் வரலாற்றை கேட்டு மகிழ்வதற்காகவே
காதுகளையும் நாம் பெற்றிருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்.
கைகள் அவனை வணங்குவதற்கும், அர்ச்சனைகள் செய்து அவனை
மகிழ்விப்பதற்கும், மற்றும் முழு உடலும் அவனுக்கு பணிவிடைகள்
செய்வதற்கும் நாம் பெற்றிருப்பதாக நினைக்க வேண்டும்.நமது
முகமோ அவனது பாவனைகளை பிரதிபலிப்பதாக கருத வேண்டும்.
இவ்வாறாக நமதுஉடல், பொருள், ஆவி என்ற அனைத்தையும்,முருகனிடம் சமர்ப்பித்து விட்டு, அவனிடம் லயத்தை அடையவேண்டும்.
மாற்று கருத்துக்களுக்கு இடம் கொடாமல், அசைக்க முடியாத
நம்பிக்கையுடன் அவனை சரணடைந்திட வேண்டும். இவ்விதமாக
சிந்தித்தவாறு, இந்த ஸ்லோகத்தை ஜபித்து வருகின்றவர்கள்
முருகனாகவே ( சாயுஜ்யம் ) ஆகிவிடுவார்கள்.
No comments:
Post a Comment