ஸ்லோகம் 14 ஆரோக்யம் நல்கும்
" ஸ்புரன் மந்தஹாஸை: ஸஹம்ஸானி சஞ்சத்
கடாக்ஷா வலீ ப்ருங்க ஸங்கோஜ் ஜ்வலானி
ஸுதாஸ்யந்தி பிம்பாதராணீச ஸூனோ
தவா லோகயே ஷண்முகாம் போரு ஹாணி "
அன்னப் பறவைகளின அசைவுகள் போன்ற புன்சிரிப்புகள,
கருவண்டுகள் ஊர்வது போன்ற பன்னிரு கண்கள், அமிருதம்
பெருக்கும் கொவ்வை பழங்கள் போன்ற உதடுகள் என்றவாறு
திகழும் தங்களது ஆறு முகத் தாமரைகளை நான் காண்கிறேன்.
பால் போன்ற வெண்மை நிற அன்னப் பறவைகள், தாமரை
தடாகத்தில் அங்குமிங்கும் , மெதுவாக அசைந்து நீந்துவது போல,
வெண் பற்கள் சற்றே தெரிய வெளிப்படும் முருகனது புன்சிரிப்புகள்
காண்போர் மனதை வெகுவாக கவர்ந்துவிடுகின்றன என்று, சங்கரர்
நேரில் கண்டு போற்றுகிறார். தேவர்களுக்கு இமைகள் கொட்டுவதில்லை
என்று சொல்வதுண்டு. முருகனின் பன்னிரு கண்களின் கருவிழிகள்,
கருவண்டுகள் ஊர்வது போன்று இருக்கின்றன. உதடுகள அனைத்தும்
அமிருத ரசம் சொரியும் கொவ்வை பழங்களை நிகர்த்திருக்கின்றன.
இவ்விதமாக அழகு பொலியும், தங்களது ஆறு முகத் தாமரைகளை
நான் தரிசித்து கொண்டிருக்கிறேன், என்று சங்கரர் கூறுகிறார்.
நோய்கள் நீங்கி, நல்ல ஆரோக்யம் அடைவதற்கு, இந்த ஸ்லோகத்தை
ஜபிக்க வேண்டும். முருகனை நேரில் காண உதவும்.
" ஸ்புரன் மந்தஹாஸை: ஸஹம்ஸானி சஞ்சத்
கடாக்ஷா வலீ ப்ருங்க ஸங்கோஜ் ஜ்வலானி
ஸுதாஸ்யந்தி பிம்பாதராணீச ஸூனோ
தவா லோகயே ஷண்முகாம் போரு ஹாணி "
அன்னப் பறவைகளின அசைவுகள் போன்ற புன்சிரிப்புகள,
கருவண்டுகள் ஊர்வது போன்ற பன்னிரு கண்கள், அமிருதம்
பெருக்கும் கொவ்வை பழங்கள் போன்ற உதடுகள் என்றவாறு
திகழும் தங்களது ஆறு முகத் தாமரைகளை நான் காண்கிறேன்.
பால் போன்ற வெண்மை நிற அன்னப் பறவைகள், தாமரை
தடாகத்தில் அங்குமிங்கும் , மெதுவாக அசைந்து நீந்துவது போல,
வெண் பற்கள் சற்றே தெரிய வெளிப்படும் முருகனது புன்சிரிப்புகள்
காண்போர் மனதை வெகுவாக கவர்ந்துவிடுகின்றன என்று, சங்கரர்
நேரில் கண்டு போற்றுகிறார். தேவர்களுக்கு இமைகள் கொட்டுவதில்லை
என்று சொல்வதுண்டு. முருகனின் பன்னிரு கண்களின் கருவிழிகள்,
கருவண்டுகள் ஊர்வது போன்று இருக்கின்றன. உதடுகள அனைத்தும்
அமிருத ரசம் சொரியும் கொவ்வை பழங்களை நிகர்த்திருக்கின்றன.
இவ்விதமாக அழகு பொலியும், தங்களது ஆறு முகத் தாமரைகளை
நான் தரிசித்து கொண்டிருக்கிறேன், என்று சங்கரர் கூறுகிறார்.
நோய்கள் நீங்கி, நல்ல ஆரோக்யம் அடைவதற்கு, இந்த ஸ்லோகத்தை
ஜபிக்க வேண்டும். முருகனை நேரில் காண உதவும்.
No comments:
Post a Comment