ஸ்லோகம் 1 விநாயகர் வணக்கம்
ஸதா பாலரூபாபி ,விக்னாத்ரி ஹந்த்ரீ,
மஹாதந்தி வக்த்ராபி, பஞ்சாஸ்ய மான்யா,
வதீந்ராதிம்ருக்யா, கணேசாபிதா மே,
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி:
குழந்தை வடிவிலேயே எப்பொழுதும்,நிலைத்திருப்பினும்
மாபெரும் மலைகள் போலெழும், தடைகளை தகர்க்கின்றவரும்,
நீண்ட தந்தங்களுடைய யானை முகத்தினரும், ஐம்முக சிவனாலும்
ஆராதிக்கப் படுகின்றவரும், பிரம்மன் இந்திரன் முதலிய தேவர்கள
அனைவராலும் தேடப்படுகின்றவரும், வர்ணணைகளுக்கு
எட்டாதவரும், கணேசன் என்ற பெயருடையவருமான அந்த
மங்களகரமானவர், எனக்கு செல்வத்தை வழங்கட்டும்."
கவலைகள் என்றால் என்னவென்றறியாத கணேசன் மற்ற
எவருடைய கவலைகளையும் போக்கடிப்பதில் வல்லவர்.
குழந்தைகள் போல எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதால்
குழந்தை உருவிலேயே விளங்கி கொண்டிருக்கிறார். செயல்
எதுவானாலும், எப்படிபட்டதானாலும் அதை விரைவில் செய்து
முடிக்கும் பேராற்றல் பெற்ற ஒரு அதிசய குழந்தை.தன்னை
துதிக்கின்றவர்களுககு ஏற்படும் அனைத்துவித தடைகளையும்
அகற்றி வெற்றியை அடைய செய்கிறார்.ஆஸ்யம் என்ற சொல்லுக்கு
முகம் என்று பொருள். பஞ்சாஸ்யம் என்பதால் ஐந்து முகங்கள்
கொண்ட சிவபெருமானை குறிக்கிறது. சிவனுக்கும் சில நேரங்களில்
இவருடைய தயவு தேவைபடுகிறது. மேலும் பஞ்சாஸ்யம் எனறு
சிங்கத்திற்கு பொருள் கொள்ளலாம்.பொதுவாக யானைகள்
சிங்கத்தை கண்டால் பயந்து ஓடிவிடும். ஆனால் யானைமுக
கணேசனை கண்டாலோ சிங்கங்கள் பணிந்து துதிக்கின்றன.
பிரம்மன்,இந்திரன் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள் தங்களது
முயற்சிகளில் வெற்றி பெற இவரைத்தான் தேடி வரவேண்டியிருக்கும்.
இவரையோ இவரது மகிமைகளையோ முழுமையாக வர்ணிப்பதென்பது
இயலாத காரியம். வினாயகரை துதித்துவிட்டுதான் மற்ற தெய்வங்களை
துதிக்கவேண்டும் என்பது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இதை அனுசரித்துதான் சங்கர பகவத்பாதாள் முதல்
ஸ்லோகத்தில் கணேசன் என்ற பெயருடைய மங்கள மூர்த்தியை
வணங்கிவிட்டு ஏனய முப்பத்து இரண்டு ஸ்லோகங்களால்.
செந்திலாண்டவனை போற்றி துதிக்கிறார்.
ஸதா பாலரூபாபி ,விக்னாத்ரி ஹந்த்ரீ,
மஹாதந்தி வக்த்ராபி, பஞ்சாஸ்ய மான்யா,
வதீந்ராதிம்ருக்யா, கணேசாபிதா மே,
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி:
குழந்தை வடிவிலேயே எப்பொழுதும்,நிலைத்திருப்பினும்
மாபெரும் மலைகள் போலெழும், தடைகளை தகர்க்கின்றவரும்,
நீண்ட தந்தங்களுடைய யானை முகத்தினரும், ஐம்முக சிவனாலும்
ஆராதிக்கப் படுகின்றவரும், பிரம்மன் இந்திரன் முதலிய தேவர்கள
அனைவராலும் தேடப்படுகின்றவரும், வர்ணணைகளுக்கு
எட்டாதவரும், கணேசன் என்ற பெயருடையவருமான அந்த
மங்களகரமானவர், எனக்கு செல்வத்தை வழங்கட்டும்."
கவலைகள் என்றால் என்னவென்றறியாத கணேசன் மற்ற
எவருடைய கவலைகளையும் போக்கடிப்பதில் வல்லவர்.
குழந்தைகள் போல எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதால்
குழந்தை உருவிலேயே விளங்கி கொண்டிருக்கிறார். செயல்
எதுவானாலும், எப்படிபட்டதானாலும் அதை விரைவில் செய்து
முடிக்கும் பேராற்றல் பெற்ற ஒரு அதிசய குழந்தை.தன்னை
துதிக்கின்றவர்களுககு ஏற்படும் அனைத்துவித தடைகளையும்
அகற்றி வெற்றியை அடைய செய்கிறார்.ஆஸ்யம் என்ற சொல்லுக்கு
முகம் என்று பொருள். பஞ்சாஸ்யம் என்பதால் ஐந்து முகங்கள்
கொண்ட சிவபெருமானை குறிக்கிறது. சிவனுக்கும் சில நேரங்களில்
இவருடைய தயவு தேவைபடுகிறது. மேலும் பஞ்சாஸ்யம் எனறு
சிங்கத்திற்கு பொருள் கொள்ளலாம்.பொதுவாக யானைகள்
சிங்கத்தை கண்டால் பயந்து ஓடிவிடும். ஆனால் யானைமுக
கணேசனை கண்டாலோ சிங்கங்கள் பணிந்து துதிக்கின்றன.
பிரம்மன்,இந்திரன் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள் தங்களது
முயற்சிகளில் வெற்றி பெற இவரைத்தான் தேடி வரவேண்டியிருக்கும்.
இவரையோ இவரது மகிமைகளையோ முழுமையாக வர்ணிப்பதென்பது
இயலாத காரியம். வினாயகரை துதித்துவிட்டுதான் மற்ற தெய்வங்களை
துதிக்கவேண்டும் என்பது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இதை அனுசரித்துதான் சங்கர பகவத்பாதாள் முதல்
ஸ்லோகத்தில் கணேசன் என்ற பெயருடைய மங்கள மூர்த்தியை
வணங்கிவிட்டு ஏனய முப்பத்து இரண்டு ஸ்லோகங்களால்.
செந்திலாண்டவனை போற்றி துதிக்கிறார்.
No comments:
Post a Comment