ஸ்லோகம் 5 துயரங்கள் நீங்கிடும்.
" யதாப்தேஸ் தரங்கா:லயம் யாந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்."
உயரமான சமுத்ர அலைகள், எவ்வாறு தனது ஆலயவாயிலை
அடைந்ததும் அழிகின்றனவோ, அவ்வாறே பக்தர்களின் பேராபத்துகள்
தனது ஆலயவாயிலுக்கு வந்ததுமே அழிந்துவிடுகினறன என்பதை
அலைகளை காட்டுவதன் மூலம் உணர்த்துகின்ற குஹன் முருகனை
இதயத்தாமரையில் தியானிக்கின்றேன்.
எவையெவைகளை இன்பங்கள் என்று ஏற்றுக்கொண்டு, அவைகளை
நாடி தேடிச் சென்று அனுபவித்தாலும், பின்நாட்களில் அவைகள்
நம்மை துன்பக் கடலுக்கு அழைத்துச் சென்று அதில் நம்மை நன்கு
அமிழ்த்திவிடுகின்றன. இது யாவரும் அனுபவித்தறிந்த உண்மை.
துன்பங்களும், துயரங்களும் நிறைந்த வாழ்வில் நிம்மதி காண
இறைவழிபாடு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அமைதியும்,
ஆறுதலும், நிம்மதியும் அளித்து பக்தர்களை காத்தருள்வதில்
முருகனுக்கு இணை முருகனே. காரணங்கள் எதுவாயினும்,
கண்டறிந்து கரையேற்றுவதில் கந்தன் தனித்தன்மை கொண்ட
திறமைசாலி. கசந்து தவிக்கும் மனதிற்கு, தித்திக்கும் தேனமுதாய்
திகழ்கின்றவன். " பத்தித் திருமுக மாறுடன், பன்னிரு தோள்களுமாய்
தித்தித் திருக்கும் அமுது கண்டேன் " ( கந்தர் அலங்காரம்- கவி 47 )
இன்றய நாகரீக வாழ்வில் விபத்துகளும்,ஆபத்துகளும் சாதாரண
சம்பவங்களாகி விட்டன. ஆலயவாயிலை அடைந்ததுமே அலைகள்
அடங்கி அமைதியாவது போல, பக்தர்களுக்கு ஏற்படும், ஏற்படவிருக்கும்
அனைத்து ஆபத்துகளும் அவர்கள் ஆலயத்தை நெருங்கியதுமே
அழிந்துவிடுகின்றன. இந்த உண்மையை உபதேசிப்பது போல
செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் குகன் முருகனை இதயத்தில்
இருத்தி சங்கரர் தியானம் செய்கிறார். நாமும் அவரை பின்பற்றி
முருகனை வழிப்பட்டு உய்வோம், உயர்வோம். இந்த ஸ்லோகத்தை
ஜபித்து வருகின்றவர்களை ஆபத்துகள் அணுகாது. மருத்துவம்
அறியாத மர்மங்கள் மந்திரத்தில் இருக்கின்றன.
" யதாப்தேஸ் தரங்கா:லயம் யாந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்."
உயரமான சமுத்ர அலைகள், எவ்வாறு தனது ஆலயவாயிலை
அடைந்ததும் அழிகின்றனவோ, அவ்வாறே பக்தர்களின் பேராபத்துகள்
தனது ஆலயவாயிலுக்கு வந்ததுமே அழிந்துவிடுகினறன என்பதை
அலைகளை காட்டுவதன் மூலம் உணர்த்துகின்ற குஹன் முருகனை
இதயத்தாமரையில் தியானிக்கின்றேன்.
எவையெவைகளை இன்பங்கள் என்று ஏற்றுக்கொண்டு, அவைகளை
நாடி தேடிச் சென்று அனுபவித்தாலும், பின்நாட்களில் அவைகள்
நம்மை துன்பக் கடலுக்கு அழைத்துச் சென்று அதில் நம்மை நன்கு
அமிழ்த்திவிடுகின்றன. இது யாவரும் அனுபவித்தறிந்த உண்மை.
துன்பங்களும், துயரங்களும் நிறைந்த வாழ்வில் நிம்மதி காண
இறைவழிபாடு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அமைதியும்,
ஆறுதலும், நிம்மதியும் அளித்து பக்தர்களை காத்தருள்வதில்
முருகனுக்கு இணை முருகனே. காரணங்கள் எதுவாயினும்,
கண்டறிந்து கரையேற்றுவதில் கந்தன் தனித்தன்மை கொண்ட
திறமைசாலி. கசந்து தவிக்கும் மனதிற்கு, தித்திக்கும் தேனமுதாய்
திகழ்கின்றவன். " பத்தித் திருமுக மாறுடன், பன்னிரு தோள்களுமாய்
தித்தித் திருக்கும் அமுது கண்டேன் " ( கந்தர் அலங்காரம்- கவி 47 )
இன்றய நாகரீக வாழ்வில் விபத்துகளும்,ஆபத்துகளும் சாதாரண
சம்பவங்களாகி விட்டன. ஆலயவாயிலை அடைந்ததுமே அலைகள்
அடங்கி அமைதியாவது போல, பக்தர்களுக்கு ஏற்படும், ஏற்படவிருக்கும்
அனைத்து ஆபத்துகளும் அவர்கள் ஆலயத்தை நெருங்கியதுமே
அழிந்துவிடுகின்றன. இந்த உண்மையை உபதேசிப்பது போல
செந்தூரில் கோவில் கொண்டிருக்கும் குகன் முருகனை இதயத்தில்
இருத்தி சங்கரர் தியானம் செய்கிறார். நாமும் அவரை பின்பற்றி
முருகனை வழிப்பட்டு உய்வோம், உயர்வோம். இந்த ஸ்லோகத்தை
ஜபித்து வருகின்றவர்களை ஆபத்துகள் அணுகாது. மருத்துவம்
அறியாத மர்மங்கள் மந்திரத்தில் இருக்கின்றன.
No comments:
Post a Comment