ஸ்லோகம் 23 கவலைகள் நீங்குவதற்கு.
" ஸஹஸ் ராண்ட போக்தா த்வயா சூரநாமா
ஹதஸ்தாரக: ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய:
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன: க்லேச மேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி ",
ஆயிரம் பிரமாண்டங்களை, ஆண்ட சூரபத்மன், தாரகன். சிம்ம
வக்த்ரன் என்ற அசுரர்கள, தங்களால் கொல்லப் பட்டார்கள். எனது
இதயத்தில் இருக்கின்ற, மனக்கவலையை மட்டும் கொல்லவில்லையே.
பிரபுவே முருகா, நான் என் செய்வேன் எங்கு போவேன்.
எந்த ஒரு செயலுக்கும், காரணம் என்று ஒன்று இருந்து தான்ஆக
வேண்டும். அந்த காரணத்தினால் விளைந்த செயல்தான் , பிறிதொரு
செயலுக்கு காரணமாக அமைகிறது. இந்த காரண காரிய விதிதான்
நீண்ட தொடர் கதை போல நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இதை
நன்கு சிந்தித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எத்துனையோ
வகையான கவலைகள், மனதில் புகுந்து கொண்டு வாட்டிவதைத்து
இதயத்தை கலங்கடிக்கின்றன. ஆயிரமாயிரம் பிரமாண்டங்களை
ஆண்ட சூரபத்மன், தாரகன், சிம்மவக்த்ரன் என்ற அசுரர்களை
கொன்று தேவர்களை விடுவித்து, மாபெரும் வீரச்செயல்கள்
புரிந்த முருகன், தனது இதயத்தில் இருக்கும் மனக்கவலைகளை
மட்டும் கொல்லாமல் இருக்கின்றானே என்று வருந்துகிறார்.
இவ்விதம் வாளாவிருப்பின், பிரபுவே முருகா, நான் என்ன செய்வேன்
எங்கே போவேன் என்று செந்திலாண்ட வனை, கண்ணுற்றவாறு
தனது இயலாமையை, தெரிவித்துக் கொள்கிறார். இந்த ஸ்லோகத்தை
ஐபிக்கின்றவர்கள், கவலைகளினின்றும் விடுவிக்கபடுகின்றார்கள் .
" ஸஹஸ் ராண்ட போக்தா த்வயா சூரநாமா
ஹதஸ்தாரக: ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய:
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன: க்லேச மேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி ",
ஆயிரம் பிரமாண்டங்களை, ஆண்ட சூரபத்மன், தாரகன். சிம்ம
வக்த்ரன் என்ற அசுரர்கள, தங்களால் கொல்லப் பட்டார்கள். எனது
இதயத்தில் இருக்கின்ற, மனக்கவலையை மட்டும் கொல்லவில்லையே.
பிரபுவே முருகா, நான் என் செய்வேன் எங்கு போவேன்.
எந்த ஒரு செயலுக்கும், காரணம் என்று ஒன்று இருந்து தான்ஆக
வேண்டும். அந்த காரணத்தினால் விளைந்த செயல்தான் , பிறிதொரு
செயலுக்கு காரணமாக அமைகிறது. இந்த காரண காரிய விதிதான்
நீண்ட தொடர் கதை போல நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இதை
நன்கு சிந்தித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எத்துனையோ
வகையான கவலைகள், மனதில் புகுந்து கொண்டு வாட்டிவதைத்து
இதயத்தை கலங்கடிக்கின்றன. ஆயிரமாயிரம் பிரமாண்டங்களை
ஆண்ட சூரபத்மன், தாரகன், சிம்மவக்த்ரன் என்ற அசுரர்களை
கொன்று தேவர்களை விடுவித்து, மாபெரும் வீரச்செயல்கள்
புரிந்த முருகன், தனது இதயத்தில் இருக்கும் மனக்கவலைகளை
மட்டும் கொல்லாமல் இருக்கின்றானே என்று வருந்துகிறார்.
இவ்விதம் வாளாவிருப்பின், பிரபுவே முருகா, நான் என்ன செய்வேன்
எங்கே போவேன் என்று செந்திலாண்ட வனை, கண்ணுற்றவாறு
தனது இயலாமையை, தெரிவித்துக் கொள்கிறார். இந்த ஸ்லோகத்தை
ஐபிக்கின்றவர்கள், கவலைகளினின்றும் விடுவிக்கபடுகின்றார்கள் .
No comments:
Post a Comment