ஸ்லோகம் 15 கடைக்கண் பார்வை.
" விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ் யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணே ஷு
மயிஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதி தத்சேத்
பவேத் தே தயாசீல கா நாம ஹானி: "
தயாசீலனே முருகா, அகன்று காதுவரை நீண்டு, யாண்டும் கருணை
பெருக்குடன் கூடிய, தங்களது பன்ணிரண்டு கண்களில், ஒன்றின்
கடைக்கண் பார்வை, ஒருமுறை சறிதேனும் என் மேல் போடப்பட்டால்,
தங்களுக்கு என்ன நஷ்டம்?
வெளியுலக காட்சிகள் அனைத்தையும் உள்வாங்கி மனதில் பதிய
செய்வதிலும், மனதில் எழும் எண்ணங்களை வெளியேற்றுவதிலும்
கண்கள் முக்கிய பங்குவகிககின்றன. சோர்வு,களைப்பு,கவலை,
மகிழ்ச்சி என்ற உணர்சிகளை எல்லாம் கண்கள் பிரதிபலிப்பது
யாவரும் அறிந்ததே. அதனால்தான் அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் என்கிறார்கள். அடியார்கள் பால் அளவற்ற அன்பும் கருணையும்
கொண்டிலங்கும், ஆறுமுகனின் மனமோ,எப்பொழுதும் கருணை
பெருக்குடன் கூடியதாக இருக்கிறது.அதனால்தான் கந்தா, முருகா,
கருணாகரனே என்றெல்லாம் அழைக்கறார்கள். தீனதயாபரன், தயா
சாகரன் என்றும் துதிக்கபடும் முருகனை, சங்கரர் தயாசீலா என்கிறார்.
தன்னை நாடி வரும் பக்தர்களை காப்பாற்றி, கரையேற்றவதை
ஒரு சபதமாகவே எடுத்துக்கொண்டு, திருச்செந்தூரில் விளங்கும்
முருகனின் பன்னிரண்டு கண்களும் கருணை மழை பொழியும்
கருமேகங்கள் போல காணப்படுகின்றன. இத்துனை மகிமையும்,
மகத்துவமும் வாய்ந்த கண்கள் பன்னிரண்டில், ஒன்றினது கடைகண்
பார்வையை என் மேல் சில வினாடிகளேனும் விழ செய்வதால்
தங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டுவிட போகிறது என்று சங்கரர்,
செந்திலாண்டவனை பார்த்து வினவுகிறார். அவனுடைய, அந்த
கடைகண் வீச்சில், சில நொடிகளேனும் சிக்கிக் கொள்ளும்
பாக்யம் கிடைத்து விட்டால், வேறெதையும் தேடித் திரிய வேண்டியதில்லை. பொல்லன போய், நல்லன அனைத்தும்
நம்மை தேடி வந்தடையும்.
" விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ் யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணே ஷு
மயிஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதி தத்சேத்
பவேத் தே தயாசீல கா நாம ஹானி: "
தயாசீலனே முருகா, அகன்று காதுவரை நீண்டு, யாண்டும் கருணை
பெருக்குடன் கூடிய, தங்களது பன்ணிரண்டு கண்களில், ஒன்றின்
கடைக்கண் பார்வை, ஒருமுறை சறிதேனும் என் மேல் போடப்பட்டால்,
தங்களுக்கு என்ன நஷ்டம்?
வெளியுலக காட்சிகள் அனைத்தையும் உள்வாங்கி மனதில் பதிய
செய்வதிலும், மனதில் எழும் எண்ணங்களை வெளியேற்றுவதிலும்
கண்கள் முக்கிய பங்குவகிககின்றன. சோர்வு,களைப்பு,கவலை,
மகிழ்ச்சி என்ற உணர்சிகளை எல்லாம் கண்கள் பிரதிபலிப்பது
யாவரும் அறிந்ததே. அதனால்தான் அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் என்கிறார்கள். அடியார்கள் பால் அளவற்ற அன்பும் கருணையும்
கொண்டிலங்கும், ஆறுமுகனின் மனமோ,எப்பொழுதும் கருணை
பெருக்குடன் கூடியதாக இருக்கிறது.அதனால்தான் கந்தா, முருகா,
கருணாகரனே என்றெல்லாம் அழைக்கறார்கள். தீனதயாபரன், தயா
சாகரன் என்றும் துதிக்கபடும் முருகனை, சங்கரர் தயாசீலா என்கிறார்.
தன்னை நாடி வரும் பக்தர்களை காப்பாற்றி, கரையேற்றவதை
ஒரு சபதமாகவே எடுத்துக்கொண்டு, திருச்செந்தூரில் விளங்கும்
முருகனின் பன்னிரண்டு கண்களும் கருணை மழை பொழியும்
கருமேகங்கள் போல காணப்படுகின்றன. இத்துனை மகிமையும்,
மகத்துவமும் வாய்ந்த கண்கள் பன்னிரண்டில், ஒன்றினது கடைகண்
பார்வையை என் மேல் சில வினாடிகளேனும் விழ செய்வதால்
தங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டுவிட போகிறது என்று சங்கரர்,
செந்திலாண்டவனை பார்த்து வினவுகிறார். அவனுடைய, அந்த
கடைகண் வீச்சில், சில நொடிகளேனும் சிக்கிக் கொள்ளும்
பாக்யம் கிடைத்து விட்டால், வேறெதையும் தேடித் திரிய வேண்டியதில்லை. பொல்லன போய், நல்லன அனைத்தும்
நம்மை தேடி வந்தடையும்.
No comments:
Post a Comment