Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 20 திவ்ய தரிசனம் கிடைக்க.

   " ப்ரஸாந் தேந்த்ரியே நஷ்ட ஸம்க்ஞே விசேஷ்டே
      கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
   ப்ரயாணோன் முகே மய்யநாதே ததானீம்
     த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹ த்வம் ".

 கண் முதலான இந்திரியங்கள ஒடுங்கி, நினைவிழந்து அசைவற்று
வாயினின்றும் கபம் கக்குகின்றவனாய், பயத்தால் நடுங்கியவாறு
உயிர் விடும் பொழுது, தயாளனே குஹனே என் முன்னிலையில்,
நீங்கள விரைவாக வந்துவிட வேண்டும்.

ஜனனம் மரணம் என்ற நிகழ்வுகள் கால சக்கரத்தில் பிணைக்கபட்டு,
சதா சுழன்றவாறு, வருவதும் போவதுமாக இருந்து கொண்டிருக்கிறது.
அந்த பிணைப்பை அறுத்து, விடுவித்துக் கொண்டு இறைவனுடன்
இணைவதுதான் வாழ்வதன் நோக்கம். ஜீவனுக்கும் அவித்யைக்கும்
உள்ள தொடர்பை துண்டித்து சிரஞ்சீவியாய் பேரின்ப சுவையை
அனுபவிக்க வேண்டும். இந்த குறிகோளில் வெற்றி பெறுவதற்கு
இறை வழிபாட்டை தவிர வேறெதுவும் உதவுவதில்லை.இந்த
ஸ்லோகத்தில், சங்கரர் மரணத் தருவாயில் தவிக்கும் மனிதர்களின்
இக்கட்டான நிலயை எடுத்தரைக்கிறார். கண் முதலான ஐந்து
இந்திரியங்ள் செயலிழக்க தொடங்குகின்றன, வாயினின்றும் கபம்
வெளியேறுகிறது, பயத்தின் காரணமாக உடல் நடுங்கிய வண்ணம்
இருக்கிறது, நினைவுகள் இழக்கப்பட்டு, உடல் அசைவுகளும்
நின்று, அனைத்தும் அடங்கிப் போகின்றன. நம்மை பற்றி நாம்
அறிந்தவைகளும், நம்மை பற்றி நாமே அறியாதவைகளும்,
ஆறுமுகனுக்கு தெரியும். உடலை விடுத்து உயிர் நீங்கும் அந்த
மிகவும் தேவையான தருணத்தில் அனைத்தும் அறிந்த முருகன்
ஒருவனே நமக்கு துணை. ஆதலால் உயிர் விடும் பொழுது,
தயாளனே, குஹனே முருகனே, எனக்கு எதிரில் தாங்கள் விரைவாக
தோன்றி காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

No comments:

Post a Comment