ஸ்லோகம் 27 வரமருளும் வள்ளல்.
" முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா-
மபீஷ்ட ப்ரதா: ஸந்தி ஸர்வத்ர தேவா:
ந்ருணாமந்த்ய ஜானா மபி ஸ்வார்த் ததானே
குஹாத் தைவ மன்யம் ந ஜானே ந ஜானே ",
.முனிவர்களுக்கும், பக்தி செலுத்தும் மனிதர்களுக்கும், விரும்புவன
வழங்க எங்கும் தேவர்கள் இருக்கின்றார்கள். தாழ்ந்த ஜாதி மனிதருக்கும்,
வேண்டுவன வழங்குவதில், குஹனை தவிர வேறு தெய்வத்தை
நான் அறியவே இல்லை.
தன்னிடம் உண்மையான நம்பிக்கையுடன் பக்தி செலுத்துபவர்கள்,
எவராயினும், பாரபட்சம் எதுவுமின்றி, அவர்கள் கோரிக்கைகளை
பூர்த்தி செய்தருளுவதில், முருகன் தனித்தன்மை கொண்ட தெய்வம்.
தாழ்ந்த ஜாதியினன்,உயர்ந்த ஜாதியினன் என்றெல்லாம் பேதம்
பார்க்காமல், பக்தியில் மகிழ்ந்து அவர்கள் வேண்டும் வரங்கள் தரும்
வள்ளல். திருச்செந்தூருக்கு அருகில் ஆத்தூர் என்ற கிராமம் உள்ளது.
தாமிரபரணி ஆறு கடலுடன் கலந்திடும் இடம். முன்னொரு காலத்தில்,
ஆத்தூரில் வாழ்ந்த, மிகவும் தாழ்ந்த வகுப்பினை சேர்ந்த, முருகனிடம்
தீவிரமாக பக்தி செலுத்திவந்த, ஒருவனுக்கு முருகன் காட்சி தந்து
ஆட்கொண்ட வரலாறு, இன்றும் பேசப்படுகிறது.முனிவர்களுக்கோ,
அல்லது இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களுக்கோ
வேண்டுவன வழங்கும் தெய்வங்கள் எங்கும் இருக்கிறார்கள.
ஆனாலும் தாழ்ந்த ஜாதியினருக்கும், கோரும் வரங்கள் கொடுப்பதில்
குஹன் முருகனை தவிர வேறு தெய்வங்கள் இருப்பதாக நான்
அறிந்தேன் இல்லை என்று சங்கரர் வியந்து போற்றுகிறார். நம்மிடம்
உள்ள குறைபாடுகளை, மனதில் கொள்ளாமல், எல்லாம் எனக்கு நீயே
என்று முருகனிடம் பக்தி செலுத்த வேண்டும். இந்த ஸ்லோகத்தை
ஜபிக்கின்றவர்கள் விரும்பியதை விரைவில் அடைவார்கள்.
No comments:
Post a Comment