ஸ்லோகம் 8 மனநிம்மதி அடைவதற்கு.
" லஸத் ஸ்வர்ண கேஹே ந்ருணாம் காம தோஹே
ஸுமஸ் தோம ஸஞ்சந்த மாணிக்ய மஞ்சே
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க்க துல்யப் ப்ரகாசம்
ஸதா பாவயே கார்த்திகேயம் ஸுரேசம். "
பக்தர்களின் விருப்பங்களை வழங்குவதற்காக, ஒளிர்கின்ற தங்க
கோயிலில், பூக்களால் பரப்பபட்ட மாணிக்க கட்டிலில், ஆயிரக்கணக்கான
உதயசூரியன்களுக்கு நிகரான காந்தியுடன் இருக்கின்ற , தேவர்களுககு
ஈசனான கார்த்திகேயனை, எப்பொழுதும் தியானிக்கிறேன்.
பக்தர்கள் கோரும் வரங்களை வழங்குகின்ற இயல்பு கொண்ட முருகன்,
ஒளி வீசும் தங்கத்தாலான கோயிலில், பூக்களால் அலங்கரிக்கபட்ட
மாணிக்க கட்டிலில் வீற்றிருப்பது காணக் கண்கொள்ளா காட்சியாகும்.
சூரியன் உதிக்கும் பொழுது முதன்முதலாக வெளிப்படும் செந்நிற
கதிர்களுக்கு அருணன் என்று பெயர். அந்த அருணனாக இருப்பது
முருகனே. செந்தில் முருகனோ ஆயிரம் உதய சூரியர்களின் மொத்த
ஒளியை காட்டிலும் பேரொளி வீசும் தேகத்தினன். அனைத்து தேவர்களுக்கும் ஈசனாக விளங்குகின்ற தேவதேவன். மன்மத
தகனத்தின் பொழுது சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளியேறிய
ஆறு நெருப்பு கோளங்கள், கங்கை நதி கலந்திடும் சரவண பொய்கையை
அடைந்ததும் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தன. கார்திகை பெண்கள்
அறுவரும் ஆளுக்கொன்றாக குழந்தைகளை எடுத்து பால் புகட்டி
வளர்க ஆரம்பித்தார்கள். பின்நாட்களில் அன்னை பார்வதியால்
ஒன்று சேர அணைக்கபட்டு ஆறுமுகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் முருகப்பெருமான் தோன்றினான்.கார்த்திகை
பெண்களால் வளர்க்கபட்டதால் கார்திகேயன் என்றும் பெயர்
பெற்றான். இத்தகு மகிமை மிகுந்த முருகனை எப்பொழுதும்
தியானிப்பதாக சங்கரர் இயம்புவது நமக்காகத்தான்.
" லஸத் ஸ்வர்ண கேஹே ந்ருணாம் காம தோஹே
ஸுமஸ் தோம ஸஞ்சந்த மாணிக்ய மஞ்சே
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க்க துல்யப் ப்ரகாசம்
ஸதா பாவயே கார்த்திகேயம் ஸுரேசம். "
பக்தர்களின் விருப்பங்களை வழங்குவதற்காக, ஒளிர்கின்ற தங்க
கோயிலில், பூக்களால் பரப்பபட்ட மாணிக்க கட்டிலில், ஆயிரக்கணக்கான
உதயசூரியன்களுக்கு நிகரான காந்தியுடன் இருக்கின்ற , தேவர்களுககு
ஈசனான கார்த்திகேயனை, எப்பொழுதும் தியானிக்கிறேன்.
பக்தர்கள் கோரும் வரங்களை வழங்குகின்ற இயல்பு கொண்ட முருகன்,
ஒளி வீசும் தங்கத்தாலான கோயிலில், பூக்களால் அலங்கரிக்கபட்ட
மாணிக்க கட்டிலில் வீற்றிருப்பது காணக் கண்கொள்ளா காட்சியாகும்.
சூரியன் உதிக்கும் பொழுது முதன்முதலாக வெளிப்படும் செந்நிற
கதிர்களுக்கு அருணன் என்று பெயர். அந்த அருணனாக இருப்பது
முருகனே. செந்தில் முருகனோ ஆயிரம் உதய சூரியர்களின் மொத்த
ஒளியை காட்டிலும் பேரொளி வீசும் தேகத்தினன். அனைத்து தேவர்களுக்கும் ஈசனாக விளங்குகின்ற தேவதேவன். மன்மத
தகனத்தின் பொழுது சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளியேறிய
ஆறு நெருப்பு கோளங்கள், கங்கை நதி கலந்திடும் சரவண பொய்கையை
அடைந்ததும் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தன. கார்திகை பெண்கள்
அறுவரும் ஆளுக்கொன்றாக குழந்தைகளை எடுத்து பால் புகட்டி
வளர்க ஆரம்பித்தார்கள். பின்நாட்களில் அன்னை பார்வதியால்
ஒன்று சேர அணைக்கபட்டு ஆறுமுகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் முருகப்பெருமான் தோன்றினான்.கார்த்திகை
பெண்களால் வளர்க்கபட்டதால் கார்திகேயன் என்றும் பெயர்
பெற்றான். இத்தகு மகிமை மிகுந்த முருகனை எப்பொழுதும்
தியானிப்பதாக சங்கரர் இயம்புவது நமக்காகத்தான்.
No comments:
Post a Comment