ஸ்லோகம் 29 நோய்கள் நீங்குவதற்கு.
" ம்ருகா: பக்ஷிணோ தம்ஸகா யே ச துஷ்டா:
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னாஸ் ஸுதூரே
விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச ஸைலே "
பொல்லாத மிருகங்கள், பறவைகள், ஈக்கள மற்றும் உடலை
பாதித்துக் கொண்டிருக்கும் கொடிய நோய்கள், இவையனைத்தும்,
கிரௌஞ்ச மலையினை தூளாக்கிய, முருகா தங்களது வேலின்
( சக்தி ) கூர்மையான நுனியினால் குத்தப்பட்டு, வெகுதூரம் கடந்து
போய் நாசத்தை அடைய வேண்டும்.
ஊழ்வினை பயனாக தாக்கிய நோய்கள், தீயசெயல்களால் நாமாக
வரவழைத்துக் கொண்ட நோய்கள் என்றவாறு எத்துனையோ
நோய்களால் வருந்திக் கொண்டிருக்கிறோம். கொடிய மிருகங்கள்,
கடும் பறவைகள், விஷ வண்டுகள், ஈக்கள், கொசுக்கள் மற்றும்
தேள் போன்ற கொட்டும் பூச்சிகள, பாம்புகள் என்ற இவைகளாலும்
நமக்கு தீங்குகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அன்னை பராசக்தியால்
வழங்கப்பட்ட, முருகன் கையாளும் வேல் அபார சக்தி வாய்ந்த
ஆயுதம். முருகன் வீசியக் கணமே, வேலின் கூர்மையான நுனி
பட்டு, கிரௌஞ்சமலை தூள்தூளானது. எனது உடலை பீடித்து
வருத்திக் கொண்டிருக்கும் நோய்கள், மற்றும் மிருகங்கள், பறவைகள்,
விஷ பூச்சிகள், என்பவைகளால் விளையும் தீங்குகள் என்பனயாவும்,
கந்தனே தங்களது வேலினால் குத்தப்பட்டு, வெகு தூரத்திற்கு
அப்பால் போய், நாசத்தை அடைய வேண்டும் என்று சங்கரர்
வேண்டிக் கொள்கிறார். இந்த ஸ்லோகம் மிகவும் சக்தி வாய்ந்தது.
வேலின் மகிமையே வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்லோக ஜபம்
ஒன்றே அனைத்து துன்பங்களையும் நீக்கிவிடும்.
" ம்ருகா: பக்ஷிணோ தம்ஸகா யே ச துஷ்டா:
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னாஸ் ஸுதூரே
விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச ஸைலே "
பொல்லாத மிருகங்கள், பறவைகள், ஈக்கள மற்றும் உடலை
பாதித்துக் கொண்டிருக்கும் கொடிய நோய்கள், இவையனைத்தும்,
கிரௌஞ்ச மலையினை தூளாக்கிய, முருகா தங்களது வேலின்
( சக்தி ) கூர்மையான நுனியினால் குத்தப்பட்டு, வெகுதூரம் கடந்து
போய் நாசத்தை அடைய வேண்டும்.
ஊழ்வினை பயனாக தாக்கிய நோய்கள், தீயசெயல்களால் நாமாக
வரவழைத்துக் கொண்ட நோய்கள் என்றவாறு எத்துனையோ
நோய்களால் வருந்திக் கொண்டிருக்கிறோம். கொடிய மிருகங்கள்,
கடும் பறவைகள், விஷ வண்டுகள், ஈக்கள், கொசுக்கள் மற்றும்
தேள் போன்ற கொட்டும் பூச்சிகள, பாம்புகள் என்ற இவைகளாலும்
நமக்கு தீங்குகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அன்னை பராசக்தியால்
வழங்கப்பட்ட, முருகன் கையாளும் வேல் அபார சக்தி வாய்ந்த
ஆயுதம். முருகன் வீசியக் கணமே, வேலின் கூர்மையான நுனி
பட்டு, கிரௌஞ்சமலை தூள்தூளானது. எனது உடலை பீடித்து
வருத்திக் கொண்டிருக்கும் நோய்கள், மற்றும் மிருகங்கள், பறவைகள்,
விஷ பூச்சிகள், என்பவைகளால் விளையும் தீங்குகள் என்பனயாவும்,
கந்தனே தங்களது வேலினால் குத்தப்பட்டு, வெகு தூரத்திற்கு
அப்பால் போய், நாசத்தை அடைய வேண்டும் என்று சங்கரர்
வேண்டிக் கொள்கிறார். இந்த ஸ்லோகம் மிகவும் சக்தி வாய்ந்தது.
வேலின் மகிமையே வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்லோக ஜபம்
ஒன்றே அனைத்து துன்பங்களையும் நீக்கிவிடும்.
No comments:
Post a Comment