Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

      ஸ்லோகம் 25 தீராப்பிணி தீருவதற்கு.

   " அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச்: ப்ரமேஹ
     ஜ்வரோன்மாத குல்மாதி ரோகா மஹாந்த:
   பிஸாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
     விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே."

தாரகனை கொன்றவரே, காக்கை வலி குஷ்டம், க்ஷயம்,மூலம்,
மூத்திர ரோகம், காய்ச்சல், பைத்தியம்,வயிற்றுவலி, போன்ற பெரும்
ரோகங்கள் மற்றும், பிசாச உபத்திரவங்கள், தங்கள் பாதங்களில்
வைத்து கொடுக்கப்படும், பன்னீர் இலை விபூதியைக் கண்டு
பயந்து ஓடிவிடுகின்றன.

இதற்கு முந்தய ஸ்லோகங்களில், மனக்கவலைகள் மாய்ந்திட
மால் மருகன், முருகனை இறைஞ்சி வேண்டினோம். சிலபல
கொடூரமான வியாதிகள் நம்மை தாக்கி வருத்திக் கொண்டிருக்கின்றன.
காக்கைவலி, குஷ்டம், க்ஷயம், மூலம், மூத்திர ரோகம், காய்ச்சல்,
பைத்தியம், வயிற்றுவலி போன்ற ரோகங்கள் பெரும் துன்பத்தை
கொடுக்கின்றன. பூத, பிரேத, பிசாசங்களால் விளையும் தீங்குகளால்
அவதியுறும்,மனிதர்கள் படும் பாடு மிகவும் பரிதாபமானது. சென்ற
பிறவிகளில், செய்த பாவங்களின் விளைவுகள் தான், தற்பொழுது
நோய்களாகவும், அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தீங்குகளாகவும்,
நம்மை பாதித்து பலவிதமாக வருத்திக் கொண்டிருக்கின்றன.
மருத்வதுறையில், வெகுவாக முன்னேறியிருக்கிறோம். ஆராய்சிகளும்
தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. ' ஆயினும கர்ம வியாதிகளை ' முழுதும் குணப்படுத்தி விடுமளவுக்கு, இன்றய மருத்துவத்தில்
வழி இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது
ஏழை எளியவர்களுக்கு எட்டாக் கனியாகத்தான் இருக்கும். அடியார்கள்
துயரங்களை அறவே நீக்கிவிடும் செந்திலாண்டவன் திருவருள்
ஒன்றுதான் சிறந்த வழி. திருச்செந்தூரில் முருகனது பாதங்களில்
அர்ச்சிக்கப்பட்ட திருநீறை, பன்னீர் இலையில் வைத்து, மடித்து
பிரசாதமாக கொடுப்பது, நெடுங்காலம் தொட்டு வழக்கத்தில்
இருந்து வருகிறது. அனைத்து ரோகங்களும், பிசாச உபத்திரவங்களும்
பன்னீர் இலை விபூதியை, கண்டு பயந்து ஓடி விடுகின்றன என்று,
முருகனை பார்தவாறு சங்கரர் கூறுகிறார். இந்த ஸ்லோகத்தை
அனைவரும் அவசியம் ஜபித்து வரவேண்டும் தீராப்பிணிகள்
யாவும் தீர்ந்துவிடும்.


No comments:

Post a Comment