Thursday, 28 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்


               ஸ்லோகம் 32 வெற்றி கூறுதல்

     " ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
         ஜயாமோக கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
      ஜயானந்த ஸிந்தோ ஜயா சேஷ பந்தோ
          ஜய த்வம் ஸதா முக்தி தானேச ஸுனோ "

    ஆனந்தத்துக்கு இருப்பிடமானவரே தாங்கள வெற்றியுடன்
விளங்கவேண்டும். அளவில்லா காந்தி உடையவரே தாங்கள்
வெற்றியுடன் விளங்க வேண்டும். நற்பலன்கள் நல்கும் புண்ணிய
சரித்திரம் பெற்றிருப்பவரே தாங்கள் வெற்றியுடன் விளங்க
வேண் டும். ஆனந்தத்தை வெளிப்படுத்தும் தோற்றம் கொண்டவரே
தாங்கள் வெற்றியுடன் விளங்க வேண்டும் . ஆனந்த கடலே,
அனைவருக்கும் உறவானவரே தாங்கள் வெற்றியுடன் விளங்க
வேண்டும். முக்தி அருளும் ஈசனின் மைந்தனே தாங்கள்
வெற்றியுடன் விளங்க வேண்டும.

ஆதி சங்கர பகவத் பாதாள், தனது துயரம் நீங்குவதற்காக, செந்தில்
முருகன் சன்னதியில், பக்தியினால் மனமுறுகிப் பாடிய பத்யமான,
ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் வியன்மிகு சக்தி வாய்ந்த மந்திர சாஸ்திரமாக
போற்றபடுகிறது. இலக்கண சுத்தத்துடன் கவிதைகள் இயற்றும்
அறிவை அடைகிறோம். பாமாலை சூட்ட தொடங்கியதுமே, முருகனின்
பாதத்தாமரைகளின் தரிசனம் கிடைக்கப் பெறுகிறோம். திருக்கயிலாய
தரிசன பலன் கைகூடுகிறது. இவைகளின் விளைவாக, பிறவிப்பிணி
நீங்கி, பாபங்கள் அகன்று, மனம் நிறைவுற்று புறத்தூய்மையுடன்
அகத்தூய்மையும் ஏற்படுகிறது. ஆகாம்யம் என்று கூறப்படும்
வரவிருக்கின்ற பாபங்களும் விலகி, மெஞ்ஞானம் ஏற்படுகிறது.
தாபங்கள் நீங்குவதால் பல்வேறு சித்திகளை பெறுவதுடன்
விரோதிகளும் வெல்லப்படுகிறார்கள்.பேரானந்தப் பெருக்கில்
திளைத்து, முருகனிடம் கலந்து விடுகிறோம். அனைத்து கவலைகளும்
அழிsந்து விடுகின்றன. மரண பயம் உண்டாவதில்லை. விஷங்களின்
நீக்கம், மனநோய்களின் முடிவு, ஆரோக்ய வளர்ச்சி, ஆயுள் விருத்தி
எனும் அனைத்து நன்மைகளையும்,கருணைக் கடல் முருகன்
அருளால் அடையப் பெறுகிறோம்.அருள்மிகு திருமுருகன்
ஆதி அந்தம் இல்லாதவன். காலத்துக்கு காலமாய், காலம் கடந்து அப்பாலும் இருக்கும் ஆனந்த ஜோதி. இத்துனை மகத்துவம் வாய்ந்த
முருகன், எப்பொழுதும் வெற்றிப் பெருக்குடன் விளங்க வேண்டும்
என்று இந்த ஸ்லோகத்தில், சங்கரர் கேட்டுக் கொள்கிறார். இது ஒரு
மங்கள ஸ்லோகம். சந்தம் அறிந்து பாடியவாறு, ஆரத்தி எடுக்க
வேண்டும். அனைத்திலும் வெற்றி பெற ஜபிக்க வேண்டும்.

No comments:

Post a Comment