ஸ்லோகம் 2 கவிதைகள் இயற்றும் அறிவு
" நஜானாமி சப்தம், நஜானாமி சார்த்தம்
நஜானாமி பத்யம், நஜானாமி கத்யம்,
சிதேகா ஷடாஸ்யா, ஹ்ருதி த்யோததே மே,
முகாந் நிஸ்ஸரந்தே, கிரஸ்சாபி சித்ரம்."
நான் சப்தம் அறிந்தவனல்ல, அதன் பொருள் அறிந்தவனல்ல,
பத்யம் அறிந்திலேன் கத்யமும் அறிந்திலேன். ஆயினும்
ஆறு முகங்களுடன் ஞான ஜோதி ஒன்று எனது இதயத்தில்
தோன்றி யதால், வாக்குகள் சப்திக்கபட்டு வெளிவருகின்றன.
பாக்கள், பாடல்கள் மற்றும் கவிதைகள் இயற்றுவதற்கு அவைகளுக்கென
ஏற்பட்டுள்ள இலக்கண அறிவு மிகவும் அவசியம்.ஓசை நயம், சொல்
நயம், சொற்கள், சொல்லவேண்டிய முறை, எதுகை மோனை
என்றெல்லாம் ஆராய்ந்து இலக்கண விதிப்படி கவிதைகள்
இயற்றுவதென்பது பேரறிவு பெற்ற கவிஞர்களால்தான் இயலும்.
திருமுருகன் அருள் கவிதைகள் இயற்றும் வல்லமையை வழங்கும்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபிக்கின்றவர்களுக்கு முருகன்
அருளால் வியன்மிகு கவிதைகள் இயற்றும் வாய்புகள் வந்தடையும்.
ஊமையாய் பிறந்த குமரகுருபரர், செந்திலாண்டவன் அருளால்
பேசும் சக்தி பெற்று, மாபெறும் கவிஞராகி பகழ் கொண்டார். இது
போன்ற எத்துனையோ அதிசயங்கள் செந்தில் முருகன் சன்னதியில்
அரங்கேறியிருக்கின்றன.பரமசிவனின் அவதாரமாய் புவியில்
தோன்றி உலவிய ஆதிசங்கரர் வடமொழியில் பாண்டித்யம்
பெற்ற மாபெரும் கவிஞர்.ஆயினும் முருகன் சன்னதியில் தன்னை
ஒரு சாதாரணமான பக்தனாக தாழ்திக் கொண்டு துதிக்கின்றார்.இது
சங்கரரின் வினய பாவம் அல்லது அவையடக்கத்தை காட்டுவதுடன,
அகந்தை அகன்ற மனதில்தான் ஆண்டவன் தோன்றுகிறான்
என்பதை தெளிவுபடுத்துகிறது. வழிபட வேண்டும் எனற எண்ணம்
தோன்றியக் கணமே, சங்கரர் இதயத்தில் ஆறுமுகத்துடன் ஞான
ஜோதியாக செந்தல் வேலன் உதித்ததனால் சொற்கள் கடல் மடை
திறந்த வெள்ளம் போல வெளிவந்தன.அதாவது முருகனே
இதயத்தில் எழுந்து தனது சொற்களால் தன்னை தானே துதித்து
கொள்வதாக கருத வேண்டியிருக்கிறது.
" நஜானாமி சப்தம், நஜானாமி சார்த்தம்
நஜானாமி பத்யம், நஜானாமி கத்யம்,
சிதேகா ஷடாஸ்யா, ஹ்ருதி த்யோததே மே,
முகாந் நிஸ்ஸரந்தே, கிரஸ்சாபி சித்ரம்."
நான் சப்தம் அறிந்தவனல்ல, அதன் பொருள் அறிந்தவனல்ல,
பத்யம் அறிந்திலேன் கத்யமும் அறிந்திலேன். ஆயினும்
ஆறு முகங்களுடன் ஞான ஜோதி ஒன்று எனது இதயத்தில்
தோன்றி யதால், வாக்குகள் சப்திக்கபட்டு வெளிவருகின்றன.
பாக்கள், பாடல்கள் மற்றும் கவிதைகள் இயற்றுவதற்கு அவைகளுக்கென
ஏற்பட்டுள்ள இலக்கண அறிவு மிகவும் அவசியம்.ஓசை நயம், சொல்
நயம், சொற்கள், சொல்லவேண்டிய முறை, எதுகை மோனை
என்றெல்லாம் ஆராய்ந்து இலக்கண விதிப்படி கவிதைகள்
இயற்றுவதென்பது பேரறிவு பெற்ற கவிஞர்களால்தான் இயலும்.
திருமுருகன் அருள் கவிதைகள் இயற்றும் வல்லமையை வழங்கும்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபிக்கின்றவர்களுக்கு முருகன்
அருளால் வியன்மிகு கவிதைகள் இயற்றும் வாய்புகள் வந்தடையும்.
ஊமையாய் பிறந்த குமரகுருபரர், செந்திலாண்டவன் அருளால்
பேசும் சக்தி பெற்று, மாபெறும் கவிஞராகி பகழ் கொண்டார். இது
போன்ற எத்துனையோ அதிசயங்கள் செந்தில் முருகன் சன்னதியில்
அரங்கேறியிருக்கின்றன.பரமசிவனின் அவதாரமாய் புவியில்
தோன்றி உலவிய ஆதிசங்கரர் வடமொழியில் பாண்டித்யம்
பெற்ற மாபெரும் கவிஞர்.ஆயினும் முருகன் சன்னதியில் தன்னை
ஒரு சாதாரணமான பக்தனாக தாழ்திக் கொண்டு துதிக்கின்றார்.இது
சங்கரரின் வினய பாவம் அல்லது அவையடக்கத்தை காட்டுவதுடன,
அகந்தை அகன்ற மனதில்தான் ஆண்டவன் தோன்றுகிறான்
என்பதை தெளிவுபடுத்துகிறது. வழிபட வேண்டும் எனற எண்ணம்
தோன்றியக் கணமே, சங்கரர் இதயத்தில் ஆறுமுகத்துடன் ஞான
ஜோதியாக செந்தல் வேலன் உதித்ததனால் சொற்கள் கடல் மடை
திறந்த வெள்ளம் போல வெளிவந்தன.அதாவது முருகனே
இதயத்தில் எழுந்து தனது சொற்களால் தன்னை தானே துதித்து
கொள்வதாக கருத வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment