Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்


      ஸ்லோகம் 22 புகலிடம் கிடைக்கும்.

   " ப்ரணம் யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
       ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்த யே(அ) னேகவாரம்
     ந வக்தும் க்ஷமோ (அ ) ஹம் ததானீம் க்ருபாப்தே
        ந கார்யாந்த காலே மனாகப் யுபே க்ஷா "

 பிரபுவே முருகா, தங்கள பாதங்களில் பலமுறை விழுந்து
வணங்கி, மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்கிறேன். கருணை
கடலே, மரணத்தருவாயில், பேசமுடியாத நிலையில், தாங்கள்
என்னை கொஞ்சமும், அலட்சியம் செய்துவிடக் கூடாது.

இதற்கு முந்தய இரண்டு ஸ்லோகங்களின் தொடர்ச்சியாகத்தான்
இந்த ஸ்லோகமும் அமைந்திருக்கிறது. அறிந்து செய்தவைகள்,
அறியாது செய்தவைகள், என்று பல்வேறு தவறுகளை செய்த
வண்ணம் இருக்கிறோம். பகுத்தறியும் குணம் கொண்டவர்களாக
இருப்பதால், எப்படி நியாயப்படுத்தி பார்த்தாலும், மனம் நிம்மதி
அடைவதில்லை. தவறுகள் தவறுகள்தான். விளைவுகளை
சந்தித்துத்தானக வேண்டும். தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டுவதே
சிறந்த பிராயசித்தம். மனமுறுகி, கண்களில் நீர்மல்க, கருணை
கடலாம் செந்திலாண்டவன், திருப்பாதங்களில், விழுந்து விழுந்து
மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும், மீண்டும் வேண்டிக் கொள்ள
வேண்டும். அடியார்களிடம் அன்பு காட்டும் முருகன், அவர்களது
வேண்டுதலை புறக்கணிப்பதில்லை. மரணம் நெருங்கிக்
கொண்டிருக்கும் பொழுது, வாய் பேசாத நிலையில், முருகா தாங்கள்
என்னை சிறிதளவும் அலட்சியம் செய்து விடாதீர்கள் என்று
சங்கரர் வேண்டிக் கொள்கிறார்.

No comments:

Post a Comment