Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 21 எமபயம் நீங்கும்

  " க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷு கோபாத்
       தஹச் சின்தி பிந்தீதி மாம் தர்ஜ யத்ஸு
    மயூரம் ஸமாருஹ்ய மா பைரிதி த்வம்
       புர: சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம். "

  எமதூதர்கள் கோபத்துடன ' பொசுக்கு, வெட்டு, பிள ' என்று என்னை
 அதட்டும் பொழுது, தாங்கள் வேலாயுதத்துடன, மயில் மீதேறிக்
 கொண்டு, ' பயப்படாதே ' என்று சொல்லியவாறு எனக்கு முன்னால்
 சீக்கிரம் வரவேண்டும்.

 இதற்கு முந்தய ஸ்லோகத்தின் தொடர்ச்சியாக, இந்த ஸ்லோகம்
அமைந்திருக்கிறது. மனம் எண்ணங்களை தோற்றுவிக்கிறது.
நாம் அந்த எண்ணங்களை, செயலாக்கி விளைவுகளை சந்திக்கிறோம்.
' தீதும், நன்றும் பிறர் தர வாரா '. அதாவது நமது எண்ணங்களின்
விளைவுகளுக்கு, நாமேதான் பொறுப்பு. எண்ணங்கள் மனத்திரையில்,
பொருத்தமான வடிவங்கள் எடுக்கின்றன.அந்த வடிவங்களும் நமது
சுவாசத்திற்கேற்ப இயங்குகின்றன.கனவுக் காட்சிகள்,கற்பனை
காட்சிகள் எல்லாம் இதில் அடங்கும். எண்ணுகின்றவன், எண்ணுதல்,
எண்ணப் படுகின்றவைகள் எனப்படும் மூன்றும் ஒன்றேஒன்றுதான்.
உபநிடதங்கள் இதைத்தான் 'தத்வமஸி ' என்று கூறுகின்றன
அதாவது, எதை நீ நினைக்கின்றாயோ, அதுவாகத்தான், நீ
இருக்கின்றாய் என்பதே அந்த வாக்கு. மரணத் தறுவாயில்
மனிதன் பயத்தின் உச்ச கட்டத்தில் இருக்கிறான்.பயத்தின் விளை வாக
மனதில், பயங்கர உருவங்கள் எழுகின்றன, அவைகளே எமதூதர்கள.
வெட்டு , பொசுக்கு என்றெல்லாம் அதட்டுகிறார்கள. உண்மையில்
அவ்விதமாக எதுவும் இல்லை. சங்கரருக்கு இது தெரிந்ததுதான்.
நமது நன்மைக்காக இது போன்ற ஸ்லோகங்களை அருளுகிறார்
என்று புரிந்து கொள்ள வேண்டும். எமதூதர்கள் தோன்றுவதற்கு
முன்பே, திரு முருகன் வேலுடன், மயில் மேல் அமர்ந்தவாறு
காட்சி தந்து ஆட்கொள்ள வேண்டும் என்று துதிக்கிறார். விரைவில்
முர்கன் வந்தருள வேண்டும் என்பதே முறையீடு.


No comments:

Post a Comment