Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 6 திருக்கயிலாய தரிசன பலன்.

  " கிரௌ மந்நிவாஸே நரா யே ( அ ) திருடா:
    ததா பர்வதே ராஜதே தே ( அ ) திருடா:
  இதீவ ப்ருவன் கந்த ஸைலாதி ரூட:
    ஸ தேவோ முதே மே ஸதா ஷண்முகோஸ்து ".

எப்பொழுது மனிதர்கள் தான் இருக்கும் மலையேறி வருகின்றார்களோ
அப்பொழுதே அவர்கள் திருக்கயிலாய மலையேறியவர்களாகவும்
ஆகிவிடுகின்றார்கள் என்று சொல்லுபவர் போல கந்தமாதன மலையில்
வீற்றிருக்கும் தேவன் ஆறுமுகக் கடவுள் எனக்கு எப்பொழுதும்
ஆனந்தத்தை அளிப்பவராக அமையட்டும்.

திருச்செந்தூரில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் கந்தமாதனம்
என்றழைக்கபடும் சிறிய மலையில் ஆனந்தமாக அமர்ந்திருக்கும்
ஆறுமுகன் தன்னை அண்டி வந்தவர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளி
கொடுப்பவனாக இருக்கவேண்டும் என்று சங்கரர் வேண்டிககொள்கிறார்.
முருகன் வெற்றி வேலனாய் கந்தமாதன மலையில் எழுந்திருப்பதை
தரிசிக்க ஆவலுடன் மலையேறும் அடியார்கள, திருக்கயிலை மலையை
ஏறியவர்களாக ஆகிவிடுகின்றார்கள என்று அறிவிப்பதன் மூலம்
திருச்செந்தூர்தான் திருக்கயிலாயம் என்றாகிறது." அஞ்சு முகத்தின்
அருட் சுடரால் வந்த ஆறுமுகப் பெருமானுமவன் ( அகத்தியர் ) "
என்று போற்றப்படும் முருகனை " செந்தில் மாமலையுறும்
செங்கல்வராயா " என்று பாலதேவராய ஸ்வாதிகள அழைக்கின்றார்கள்.
இந்த ஸ்லோகத்தை மட்டும் ஜபித்து வந்தால் திருக்கயிலாயத்தை
தரிசிப்பதால் கிடைக்கும் பலன் கிடைக்கும்.


No comments:

Post a Comment