Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்


      ஸ்லோகம் 30 குற்றங்கள் பொறுத்து அருளுதல்.

 " ஜநித்ரி பிதா ச ஸ்வ புத்ரா பராதம்
     ஸஹேதே ந கிம் தேவஸேனாதி நாத
  அஹம் சாதி பாலோ பவான் லோக தாத:
     க்ஷமஸ்வா பராதம் ஸமஸ்தம் மஹேச: "

 தேவசேனாதிபதியே, முருகா, தாயும் தந்தையும், தங்களது குழந்தைகள்
புரியும் குற்றங்களை, சகித்துக் கொள்கிறார்கள் அல்லவா? நான் மிகச்
சிறிய குழந்தை. தாங்களோ உலகங்களுக்கெல்லாம் தந்தை. மிகவும்
சிறந்த தெய்வமாகிய தாங்கள் எனது குற்றங்கள் அனைத்தையும்
பொறுத்துக் கொண்டு அனுக்ரஹிக்க வேண்டும்.

குழந்தைகள் செய்யும் தவறுகளை, பெற்றோர்கள் பொறுத்துக் கொள்வது,
மனிதர்களாகிய நம்மிடம் காணப்படும் சிறந்த பண்பு. தேவர்களுக்கு
தேவனாகவும், அவர்கள் படைக்கு தலைவனாகவும், உலகங்களுக்கு
எல்லாம் அன்புத் தந்தையாகவும் விளங்கும் முருகன் அடியார்களின்
தவறுகளை பொருட்படுத்துவதில்லை.அவர்களை நல்வழி படுத்தி
அருள் புரியும் அன்புள்ளம் கொண்டவன். தெய்வங்களுக்குள் மிகவும்
சிறப்புடன், விளங்கி இயங்கிக் கொண்டிருக்கும் முருகனிடம்,
தனது குற்றங்கள் அனைத்தையும், பொறுத்து கொள்வதுடன்
மன்னித்து அனுக்ரஹிக்க வேண்டும் என்று, சங்கரர் வேண்டிக்
கொள்கிறார். இந்த ஸ்லோகத்தை ஜபிக்கின்றவர்களுக்கு, முருகன்
அருள் பிரசாதம், விரைவில் கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment