Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 3 செந்தில் முருகன் காட்சி.

" மயூரா திரூடம், மஹாவாக்ய கூடம்
   மனோஹாரி தேஹம், மஹச்சித்த கேஹம்
மஹீ தேவதேவம், மஹாவேத பாவம்
 மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் ",

மயில் வாகனத்தில் ஏறுகின்றவரும், மஹாவாக்யங்களின்
உட்கருத்தானவரும், மனதை வசீகரிக்கும் அழகிய தேகத்தினரும்,
மஹான்களின் இதயத்தை தனது இருப்பிடமாக்கி கொண்டவரும்,
வேதவிற்பன்னர்களால் ஆராதிக்கபடுகின்றவரும், உபநிடதங்களின்
பொருளாய் திகழ்கின்றவரும், பரமசிவனின் புத்திரரும், உலகங்களை
காத்தருள்கின்வருமாகிய உம்மை வணங்குகிறேன்.

வேலும் மயிலும் துணை செய்ய, குருவாய் வருவாய் அருள்வாய்
குகனே. மயிலேறி விளையாடும் முருகன் வேலலெடுத்து
வேதனைகளை போக்குகின்றவன். மனமே மயில் வாகனம்.
நமது மனதில் புகுந்து ஆட்கொள்ளும் கெட்டிக்காரன்." அஹம்
ப்ரஹ்மாஸ்மி", " தத்வமஸி" போன்ற உபநிடத வாக்கியங்களின்
உட்பொருளாக திகழ்கிறான். ரிக்,யஜுர்,சாம,அதர்வண எனும்
நான்கு வேதங்களின் சாரமே உபநிடதங்கள். இந்த நான்கு வேதங்களே
மயில் வடிவெடுத்து முருகனுக்கு சேவை செய்கின்றன. முருகு என்ற
தமிழ் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.எவரையும் கவர்ந்து
வசீகரித்து வசியம் செய்துவிடும் பேரழகு செம்மேனியனே முருகன்..
முனிவர்களின் இதய குகையில் வசிப்பதால் குகன் எனறு பெயர்
கொண்டான். வேதங்களை ஆராய்கின்றவர்கள் முருகனைத்தான்
உபாசனா தெய்வமாக கொள்கிறார்கள.பரமசிவனின் மகன்.
தந்தைக்கே பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதன். அனைத்து
உலகங்களையும் காத்து இரட்சிக்கின்றவன்.இவ்வாறு செந்தில்
சுப்ரமண்யனை,சங்கரர் போற்றி துதிக்கறார்.

No comments:

Post a Comment