Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

    ஸ்லோகம் 16 விரும்பியதை அடையலாம்.

   " ஸுதாங் கோத் பவோ மே(அ )ஸி ஜீவேதி ஷட்தா
       ஜபன் மந்த்ர மீசோ முதா ஜிக்ர தே யாத்
    ஜகத் பார ப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:
       கிரீடோ ஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய: "

 ' மகனே, எனது தேகத்தினின்றும் தோன்றினாய், நீண்ட காலம்
ஜீவித்திரு '. எனும் மந்திரத்தை ஆறுமுறை ஜபித்தவாறு, பரமசிவன்
எந்த தலைகளை முகர்ந்து மகிழ்கின்றாரோ, அவைகள் உலகங்களை காப்பவைகளாக, கிரீடங்களுடன் பிரகாசிக்கின்றன. ஓ ஜகன்நாதா,
அவ்விதமான தங்களது தலைகளை நமஸ்கரிக்கின்றேன

கொஞ்சு மொழிக் குழந்தை, முருகனின் குஞ்சு முகத்தில் மலர்ந்து
மயக்கும், புன்முறுவலுக்கு விஞ்சியது எதுவும் இல்லை. முருகனை
குழந்தையாக, பாவித்து கொஞ்சி விளையாடிக் கிரங்கும் பக்தர்கள்
அடையும் ஆனந்தத்துக்கு எல்லையும் இல்லை, ஈடும் இல்லை.
தனது தேகத்தினின்றும் தோன்றிய மகன் முருகன் தலைகளை,
பெருமிதத்துடன் ஆறுமுறை மந்திரம் ஜபித்து, நீண்ட காலம்
ஜீவித்திருக்க வேண்டும் என்று உச்சி முகர்ந்து ஆசிர்வதித்து
மகிழ்கிறார், தந்தை பரமசிவன்.இத்தகு மகிமை வாய்ந்த முருகனின்
தலைகள், கிரீடங்கள் தரிக்கபட்னவாக அகிலங்கள் அனைத்தையும்
காப்பாற்றிக் கொண்டிருப்பவைகளாக பிரகாசிக்கின்றன.
திருமுருகனை தரிசித்தவாறு, தலைகள் ஆறுக்கும், சங்கரர் இவ்வாறு
தனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறார். பாதங்களில்
தொடங்கி, தலைகள் வரை வர்ணித்து வழிபட்ட, சங்கரர் இந்த
ஸ்லோகத்தில், விஷ்ணுவை சிறப்பிக்கும் ' ஜகன் நாதா ' என்ற
பெயரால் முருகனை அழைக்கறார்.எங்கும் வியாபித்திருக்கும்
பரம்பொருளை விஷ்ணு என்று அழைப்பது போல, முருகனின்
சிறப்பு பெயரான சுப்ரமண்யன் என்றும் அழைக்கலாம். அதாவது
ஒரே பரப்ரம்மம் கண்ணன் கந்தன் என்று பல்வேறு வடிவங்களுடன்
இயங்கிக் கொண்டிருக்கிறது. செந்திலாண்டவனை ' விராட்புருஷனாக '
சங்கரர் வர்ணித்து வணங்குகிறார். முத்தொழி லாற்றும்,முதல்
பொருளாம், ஆதிமூல சதாசிவ மூர்த்தியவன் என்ற அகத்தியர்
பேர்கள் எல்லாம், அவன் பேர்களன்றோ சொல்லும் பேதமெலாம்
வெறும் வாதமன்றோ என்று கூறுகிறார். செந்திலாண்டவன்
கோயிலில் திருமாலுக்கு தனி சன்னதி இருக்கிறது. இந்த ஸ்லோகத்தை
மட்டும் ஜபித்துவர விரும்புவன எல்லாம் கிடைக்கும். குழந்தை
பாக்யம் வேண்டுவோர் இந்த ஸ்லோகத்தை அவசியம் ஜபித்து
முருகனை குழந்தையாக பாவித்து வழிபட வேண்டும்.

No comments:

Post a Comment