ஸ்லோகம் 4 பிறவிப் பிணியகலும்.
" யதா ஸந்நிதானம் கதா மானவா மே,
பவாம்போதி பாரம் கதாஸ்தே ததைவ,
இதி வ்யஞ்ஜயன் ஸிந்துதீரே ய ஆஸ்தே,
தமீடே பவித்ரம், பராசக்தி புத்ரம்."
எப்பொழுது மனிதர்கள் எனது சன்னதியை அடைகிறார்களோ
அப்பொழுதே, அவர்கள் சம்சாரக்கடலின் கரையை அடைந்து
விடுகிறார்கள் என்று சுட்டி காட்டுவது போல சமுத்திரக்கரையில்
வசிக்கின்றவனும், பக்தர்களின் பாவங்களை போக்குகின்றவனும்,
பராசக்தியின் புத்திரனுமான முருகா, உன்னை துதிக்கிறேன்.
ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே .ஆதிசங்கரர் முருகன்
முன் நின்று கொண்டு, திருச்செந்தூரில் புஜங்கம் பாடி துதித்தார்.
திருச்செந்தூர் மிகவும் பழமை வாய்த புனித தலம். இரண்டாயிரம்
ஆண்டுகள் அல்லது அதற்கும் முன்பிருந்தே விளங்கி வரும் அழகிய
நகர்.ஆரவாரத்துடன் அலைகள் கரை அடைவதை காண்பது
ஆச்சரியமாக இருக்கும். அக்காரணம் கொண்டு நக்கீரர் திருச்சீரலைவாய்
என்று பெயரிட்டார்.கடற்கரையை ஒட்டி மற்ற எத்துனையோ
இடடங்களில் கடல் புகுந்து ஆக்ரமித்து கொண்டுவிட்டாலும்,
முருகன் கோவிலுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. அனைத்தையும்
அடக்கி ஆள்கின்ற ஆறுமுகனுக்கு கடலும் அடங்தானே வேண்டும்.
" பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,நீந்தாதார் இறைவனடிசேராதார் ",
( திரு வள்ளுவர் ) இறைவனை விடாது வழிபடுகின்றவர்கள்
பிறவி பெருங் கடலை எளிதில் நீந்தி கரை ஏறி விடுவார்கள்.அதிலும்
ஆறுமுகனை ஆராதிக்கின்றவர்கள தாங்கள்மட்டுமல்ல மற்றவர்களையும் கரையேற்றி விடுவார்கள. தனது சன்னதிக்கு
எப்பொழுது பக்தர்கள் வந்து தரிசிக்கிறார்களோ,அப்பொழுதே
அவர்கள் பிறவி பெருங்கடலை எளிதாக நீந்தி கடந்து கரையேறி
விடுவார்கள் என்பதை எடுத்து காட்டுவது போல , முருகன்
கடற்கரையில் வசித்து வருகிறான்.பராசக்தியின மைந்தனும்,
பக்தர்களின் பாவங்களை போக்கி காப்பாற்றுகின்றவனுமாகிய
அந்த செந்தில் முருகனை இவ்வாறு சங்கரர் வியந்து துதிக்கிறார்.
" யதா ஸந்நிதானம் கதா மானவா மே,
பவாம்போதி பாரம் கதாஸ்தே ததைவ,
இதி வ்யஞ்ஜயன் ஸிந்துதீரே ய ஆஸ்தே,
தமீடே பவித்ரம், பராசக்தி புத்ரம்."
எப்பொழுது மனிதர்கள் எனது சன்னதியை அடைகிறார்களோ
அப்பொழுதே, அவர்கள் சம்சாரக்கடலின் கரையை அடைந்து
விடுகிறார்கள் என்று சுட்டி காட்டுவது போல சமுத்திரக்கரையில்
வசிக்கின்றவனும், பக்தர்களின் பாவங்களை போக்குகின்றவனும்,
பராசக்தியின் புத்திரனுமான முருகா, உன்னை துதிக்கிறேன்.
ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே .ஆதிசங்கரர் முருகன்
முன் நின்று கொண்டு, திருச்செந்தூரில் புஜங்கம் பாடி துதித்தார்.
திருச்செந்தூர் மிகவும் பழமை வாய்த புனித தலம். இரண்டாயிரம்
ஆண்டுகள் அல்லது அதற்கும் முன்பிருந்தே விளங்கி வரும் அழகிய
நகர்.ஆரவாரத்துடன் அலைகள் கரை அடைவதை காண்பது
ஆச்சரியமாக இருக்கும். அக்காரணம் கொண்டு நக்கீரர் திருச்சீரலைவாய்
என்று பெயரிட்டார்.கடற்கரையை ஒட்டி மற்ற எத்துனையோ
இடடங்களில் கடல் புகுந்து ஆக்ரமித்து கொண்டுவிட்டாலும்,
முருகன் கோவிலுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. அனைத்தையும்
அடக்கி ஆள்கின்ற ஆறுமுகனுக்கு கடலும் அடங்தானே வேண்டும்.
" பிறவிப் பெருங்கடல் நீந்துவர்,நீந்தாதார் இறைவனடிசேராதார் ",
( திரு வள்ளுவர் ) இறைவனை விடாது வழிபடுகின்றவர்கள்
பிறவி பெருங் கடலை எளிதில் நீந்தி கரை ஏறி விடுவார்கள்.அதிலும்
ஆறுமுகனை ஆராதிக்கின்றவர்கள தாங்கள்மட்டுமல்ல மற்றவர்களையும் கரையேற்றி விடுவார்கள. தனது சன்னதிக்கு
எப்பொழுது பக்தர்கள் வந்து தரிசிக்கிறார்களோ,அப்பொழுதே
அவர்கள் பிறவி பெருங்கடலை எளிதாக நீந்தி கடந்து கரையேறி
விடுவார்கள் என்பதை எடுத்து காட்டுவது போல , முருகன்
கடற்கரையில் வசித்து வருகிறான்.பராசக்தியின மைந்தனும்,
பக்தர்களின் பாவங்களை போக்கி காப்பாற்றுகின்றவனுமாகிய
அந்த செந்தில் முருகனை இவ்வாறு சங்கரர் வியந்து துதிக்கிறார்.
Thank you very much for the explanation for Sri Subrahmanya Bhujanga.
ReplyDelete