Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்

   ஸ்லோகம் 13 தாபங்கள் நீங்கும்.

  " ஸதா சாரதா: ஷண் ம்ருகாங்கா யதி ஸ்யு:
     ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
  ஸதா பூர்ண பிம்பா: கலங்கைச்ச ஹீனா:
     ததா த்வன் முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் "

அய்யனே முருகா, முழு வட்டங்களாய், களங்கமற்றவைகளாய்,
ஆறு சந்திரர்கள் எங்கும் எப்பொழுதும் உதித்தவண்ணம்
இருக்குமேயானால், அவைகளை உனது முகங்கள் ஆறுக்கும்,
ஒப்பிட்டு சொல்வேன்

அன்றாடம் நாம் சந்திக்கும் சந்திரன்,களங்கத்துடன்( கறை ) கூடியதாக
விளங்குகிறது. மேலும் வளர்வது தேய்வது என்ற நிலையற்ற
தன்மை கொண்டதாகவும் உள்ளது. மாதம் ஒருமுறை மட்டும்
முழு வட்டமாய் ஒளி வீசி கண்ணுக்கு குளிர்ச்சியும்,மனதுக்கு மகிழ்ச்சியும் தருகிறது. இவ்வித குறைகளுடன் ஒரே ஒரு.சந்திரன்
தான் விண்ணில் உலவிக்கொண்டிருக்கிறது. இவ்விதமான சந்திரனை,
முருகனின் முகத்திற்கு ஒப்பிடுவது ஏற்புடயதல்ல என்பது தான்
சங்கரரின் கருத்து. அருள்மிகு திருமுருகனின், ஆறு முகங்களும்
அருளொளி சுடர்களை அள்ளி வீசியவாறு, குறைகளற்றதாய்,
எங்கும் எப்பொழுதும் பிரகாசித்தவாறு, வியன்மிகு அழகுடன்
நம்மை மயக்கி தன்பால் இழுத்துக்கொள்கின்றன. மனதுக்கும்
சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது யாவரும் அறிந்த
உண்மை. இந்த ஸ்லோகம் ஜபிக்கின்றவர்களது தாபங்கள்
அனைத்தையும் அறவே நீக்கிவிடும். எவரையும் தன்பால்
வசியம் செய்துவிடும் அற்புத ஆற்றலையும் அளிக்கும்.

No comments:

Post a Comment