Friday, 29 August 2014

சுப்ரமண்ய புஜங்கம்


     ஸ்லோகம் 28 இல்லற வாழ்வு நலமுடன் தொடரும்.

      " களத்ரம் ஸுதா பந்துவர்க: பசுர்வா
        நரோ வாத நாரீ க்ருஹே யே மதீயா:
      யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்
        ஸ்மரன் தச்ச தே சந்து ஸர்வே குமார."

  முருகா குமார, எனது வீட்டிலிருக்கும் மனைவி, புத்திரர்கள, பந்துக்கள்,
பசுக்கள், மற்றுமுள்ள ஆண்கள பெண்கள அனைவரும் தங்களை
பூஜிக்கின்றவர்களாகவும், வணங்குகின்றவர்களாகவும், தியானம்
செய்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

முருகா ,உனது தீவிர பக்தனாக நான் இருந்து வருகிறேன்.எனது
இல்லத்தில் இருக்கும் எனது மனைவி, புத்திரர்கள்,புத்திரிகள்.
நெருங்கிய உறவினர்கள். மற்றுமுள்ள ஆண்கள், பெண்கள், பசுக்கள்
எல்லோரும் கூட, உன்னிடம் பக்தி செலுத்துகின்றவர்களாக
ஆகிவிட வேண்டும். அவர்களனைவரும் உன்னை ஆர்வமுடன்
வழிபடுகின்றவர்களாகவும், தியானிக்கின்றவர்களாகவும் மாறிவிட
வேண்டும். அனைவரின் குல தெய்வமாக முருகனே விளங்க வேண்டும்.
இந்த பிராத்தனையால், மகிழும் முருகன் குடும்பத்தினர் அனைவரையும்,
தனது பக்தர்களாக, அவனே ஆக்கிவிடுவான். இந்த ஸ்லோகத்தை
ஜபித்து வந்தால் இல்லற வாழ்வு, இடையூறுகள் இல்லாமல்,
நலமுடன் தொடரும்.

No comments:

Post a Comment